Saturday, December 2, 2017

அந்த நாள் ஞாபகம்..குருவின் சேர்க்கை.

வாழ்க வளமுடன்....

எந்த அவமானமும், தோல்வியும், கடுமையானவற்றை எதிர்கொள்ளுதலின் போது நேரும் பிரச்சினைகளையும், என்னுடைய மனதிற்க்கு நிறைவு / திருப்தி தரும் வகையில் இல்லை என்பதும், அவற்றை நாமே நமக்குள்ளே ஏற்றுக்கொண்டு வாழ்ந்தே ஆக வேண்டும் என்றும் தோன்றியது...  96- 97ல்  மன்றத்தில் சேர்ந்த நேரத்தில், இந்த மன நிலை இருந்தது....  எதையும் ஏற்றுக்கொண்டு பொறுமையாகத்தான் இலக்கை அடையமுடியும்....

 தோல்வியும் அவமானங்கள் மட்டுமே நம் சொத்து அல்ல... என் முயற்சியால் அதை துடைத்துவிட்டு எழுந்திருக்க வேண்டும் என்ற வைராக்கியம்..... அதை அடைய வழி முறையை ஆழ்ந்த யோசனையின் போது தான் கிடைத்தது...  ஆனால் அனைத்து அனுபவம் உள்ளே இருந்தாலும் கூட, மற்றொரு முயற்சியால் நிச்சயம் வெற்றியை அடையலாம்... என்ற எண்ணம் இருந்தது....  மன்றத்தில் சேர்ந்து குருவின் பதில் உடனுக்குடன் எனக்குள் அவற்றை செயலாற்றும் வலிமையைத் தந்தபோது, நாம் கடந்து வந்த பாதையில் இருந்த பதிவுகள் அனைத்தும் துடைத்து விட்டதாக சிலிர்த்தது...


 மனவளக்கலை புத்தகம் ஒன்று, இரண்டு, மூன்று... புத்தகங்களை படித்துக்கொண்டே இருப்பேன்... 


 நாம் தெளிவாகிவிட முடிவெடுத்து வாழ்ந்து வந்தால், குரு நம்மைத்தேடி வருவார் என்ற வரிகள் பார்த்தபோது... அப்படி என்றால், நமது முயற்சியால் தான் தியானம் கற்க இங்கே வந்து இப்போது சாதிக்கிறோம் என்ற முனைப்பு விட்டுப்போனது.... அனைத்தும் குருவே தான் முடிவெடுக்கிறார்... தேவை நாம் நம் முனைப்பு நல்லவற்றில் சுழலவிடல் மாத்திரமே என்று உறுதியாகத் தோன்றியது...


 குருவோடு மன அலைத்தொடர்பு என்பது மிகவும் பிடித்துபோயிருந்தது.... அப்பா... அப்பா... என்று அவரை நச்சரித்துக்கொண்டே இருப்பேன்... சும்மா இருக்கும் போதும் கூட... எங்கள் ஊரில் இருந்து குரு வாழும் ஆழியாருக்குச்செல்லவேண்டும் என்றால் வெளிநாடுக்கு போவது போல என்பது எனக்கு இருந்த நிலை...  குருவைப் பார்க்க வேண்டும் எனில் யாரிடமாவது வீட்டிலோ வெளியிலோ கடன் வாங்க பிடிக்கவில்லை... என்னால் வேலைக்குச்சென்று உழைத்து சம்பாதிக்கும் போது குருவின் இடத்தைப் பார்க்கப் போகலாம்... அதுவரை குருவை மனதால் மட்டுமே பார்க்கப் பழகுவோம்...

 
 என்னுடைய நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது... கடவுள் மறுப்பு, புலால் மறுத்தல், இயற்கை உணவு உண்ணுதல், எங்கு பார்த்தாலும் வாழ்க வளமுடன் சொல்லுதல் என்பது போன்ற மன்ற அன்பர்களின் நடவடிக்கைகள் எனக்குள் இருக்கிறதா என்று வீட்டில் பார்த்துக்கொண்டே இருந்தார்கள்....

 கோயிலுச்சென்று கடவுளின் முன் கண்மூடினால், ஆக்கினையும், துரியமும் வேலை செய்யும்... கவனித்து விட்டு, கொடுக்கிற விபூதி குங்குமத்தை இட்டுக்கொண்டு வருவேன்.... புலால் மறுத்தேன்... இயற்கை உணவை உண்ணுதலுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தராதது... வாழ்க வளமுடன் என்ற வார்த்தை மன்றத்தில் தவிர எங்கும் சொல்லுவதில்லை என்று ஒரு கோடு போட்டுக்கொண்டு, தவத்தை பாதுகாத்தேன்...
 

 ஜூன் 1997-ல் மன்றத்தில் சேர்ந்து, 3 மாதத்திற்க்குள் துரியம் காயகல்பம் எடுத்த நிலையில், அக்டோபரில் சென்னையில் ஒரு வேலை கிடைத்தது... குருவே, சென்னை பெரிய ஊர்... எங்கு யாரிடம் கேட்டு மன்றத்தைத் தேடுவேன் என்று எண்ணிக்கொண்டே பஸ் ஏறி, வேலைக்குச்சேரும் ஆபிசில் சென்று அடைந்தேன்... அங்கேயே தங்கி வேலை செய்யும் படி ஒரு அமைப்பு.... இரவு 10மணிக்கு சென்று சேர்ந்து அந்த புது இடத்தில் தங்கினேன்.... விடியும்போது, விரக்தியாக இருந்தது... குருவே, மன்றம் எங்கே இருக்கிறதோ தெரியலயே....  சரி, டீ சாப்பிடலாம் என்று விடியற்காலையில் வெளியில் வந்தேன்... 

 தேனீர் சுவைத்த முதல் சுவைப்பின் போது, தேன் உள்ளே இறங்கியது.... நான் தங்கியிருந்த இடத்தின் நேரெதிரில் குருவின் மிகப்பெரிய படமும்,Saidapet ஜோன்ஸ் ரோடு மனவளக்கலை மன்றம் என்று பெரிதாக எழுதி இருந்தார்கள்... கண்களில் நீர் தழும்பியது.... அப்பா.... என்ன சொல்லுவேன்? இது போதும்.... பெரிய பலம் கிடைத்தது...

 திருவான்மியூரில் தலைமை அலுவலகத்தை எப்படி போய் சேருவது என்று கேட்டுக்கொண்டு ஒரு ஞாயிறு போனேன்... மாலை தவத்தில் கலந்துகொண்டேன்.. சந்தோசமாக இருந்தது.... மையங்கள் நன்றாக இயங்கியது.... அகத்தாய்வு ஒன்று இரண்டு, இப்படி நான்காம் நிலை எடுத்தால் தான் துரியாதீதம் கிடைக்கும்...  சரி நாம் கத்துக்கலாம் ஒரு நாள்... எண்ணிக்கொண்டே குருவின் பாடல்களைப் பாடிக்கொண்டே வந்தேன்...

 
 அடுத்த வாரம் திருவான்மியூர் சென்றபோது, பலகையில், குரு அடுத்த வாரம் சென்னை தலைமை மன்றத்திற்க்கு வருவதாக எழுதி இருந்தார்கள்.... அப்பா... என்னால் அடக்க முடியவில்லை... நான் உங்களைத் தேடி வரமுடியவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கையில், நீங்கள் இங்கேயா???  நடக்கும் விசயங்கள் எல்லாமே ஆன்மீகமாகப் பட்டது...  நிகழ்வு, குருவினால் தான் நடத்தப்படுகிறது... குருவே தேடி வருகிறார் என்று எடுத்துக்கொள்ளும் மன அலை ஏற்படவில்லை... குரு என்ன நடத்துகிறாரோ நடத்தட்டும்...  காத்திருந்தேன்...



 அடுத்த வாரம் ஞாயிறு, குருவைக்கண்டேன்... அடடா... வெண்தாடி... கம்பீரமான இறைனிலை, நிமிர்ந்து நடக்கும் பாங்கு... எனக்குள் செய்த உதவிக்கு மனதால் நன்றிகளை பத்தடி தூரத்தில் அமர்ந்து சொன்னேன்... என் மன அலை உங்களுக்குத் தெரியும் என்றேன்... எப்போதும் உருவத்தின் மேல் படர்ந்திருக்கும் அலையைப் பார்க்கும் குரு, திடீரென அந்த பூதக்கண்ணாடியால் உற்று நோக்கினார்... ஒரு நொடி கூட தாங்க முடியவில்லை..... வேண்டாம், குருவை எப்போதும் போல உள்ளேயே பிடிப்போம் என்று முடிவெடுத்தேன்...

 
 ஒவ்வொரு நாளும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை குருவோடு சத்சங்கம் என்று பார்த்தேன்... அன்று முதல் தினமும் வேலைகளை முடித்துவைத்துவிட்டு, தினமும் திருவான்மியூருக்கு சென்றேன்... சுகமாக இருந்தது... அந்த நாட்கள்... குரு எப்படி பேசுகிறார், நடந்துகொள்கிறார் என்றெல்லாம் பார்த்து பார்த்து ரசித்தேன்...  அப்படி ஒரு நாள் ஒரு அறிவிப்பு செய்தார்கள்... துரியம் வரை பயின்று 3 மாதம் ஆன அன்பர்களுக்கு சிறப்பு துரியாதீத தீட்சையை அடுத்து வாரம் குரு அளிப்பார்... 

 அப்பா.... இந்த தவத்திற்குத் தகுதியானவனா நான் என்று கண்கலங்கியது... துரியாதீதம் கற்க பல நாள் ஆகும் என்று இருந்த எனக்கு, குரு நினைத்தால் சில தினங்களில் கூடகிடைத்துவிடும் என்று புரிந்தது...

1 comment:

  1. Casino, Slots, Poker, Dining, Games - Kalat
    Casino, Slots, Poker, Dining, Games - 1xbet korean Kalat. KadangPintar kadangpintar is a septcasino member of the Karamba Casino group.

    ReplyDelete