வாழ்க வளமுடன்.
குரு வாழ்க குருவே துணை.
எண்ணற்ற நாட்கள் குருவின் தொடர்ந்த ஆராய்ச்சியால் நமக்குக் கிடைத்த ஒரு நெறி இந்த குண்டலினி யோக தியானம்.
தானும் உயர்ந்து இந்த நானிலம் பயனுறுவதற்கு ஏற்பட்ட கருணயினால் தான் நமக்கு இந்த குண்டலினி தியானத்தை குரு தந்து இருக்கிறார்.
எந்த ஒரு அனுபவத்தையும் அடுத்த ஒரு நபரும் பெற்று அவரும் தன்னைப்போல உயரவேண்டும் என்று கருணையினாலே தான் நமக்கு இந்த மாதிரியான ஒரு குருவும், தியானமும் நமக்குக்கிடைத்து இருக்கிறது.
அந்த தியானத்தைக்கொண்டு நாம் என்ன உணர்ந்தோம்? நாம் என்ன அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்போகிறோம்?
இதற்கு முன் ஒரு நிகழ்வு...
ராமானுஜர் திருவரங்கம் கோவிலில் ஆலயப்பொறுப்பை ஏற்று அங்கு பொறுப்பில் இருந்து முறை தவறி கோயில் சொத்துக்களை சீரழிக்க நினைத்தவர்களை பொறுப்பில் இருந்து நீக்குகிறார்.
மேலும் கோயிலின் நிர்வாகத்தினை ஒழுங்குபடுத்தி அனைத்து நிர்வாகத்தை சரியாக்குகிறார்.
அப்போது அவரால் பொறுப்பை இழந்தோர்கள் எல்லாம், அவர் மேல் ஆத்திரம் கொண்டு அவரை அழிக்க பல வழிகளை கையாள்கின்றனர்.
அனைத்திலும் தப்பிக்கிறார்...
ராமானுஜர் அப்போது ஒரு முறை தன் சீடர்களுடன் திருவரங்க வீதிகளின் வீடுகளுக்குச் சென்று உணவுப்பொருட்களை சேகரித்து சீடர்களுக்கும், தனக்கும் உணவை தயரிப்பது குருகுல வழக்கம்.
அப்படி அவர், பழைய கோவில் அதிகாரியின் வாசலில் நிற்கிறார். அந்த அதிகாரியின் துணைவியார், கைப்படி அரிசியை கொண்டு வந்து ராமானுஜருக்கு தானமாகத் தருகிறார். அப்போது அந்தப்பெண்மணியின் கண்ணிலே நீர் தவழ்வதையும், அதை அப்பெண்மணி மறைத்துக்கொண்டதையும் பார்த்த ராமானுஜர், அந்த அரிசியின் சிலவற்றை எடுத்து அங்கு நின்று இருந்த ஒரு காக்கையிடம் இடுகிறார்...
அதை உண்ட காகம் உடனே இறக்கிறது. அப்போது தான் அனைவருக்கும் புரிகிறது.. அந்த அரிசியிலே விஷம் வைக்கப்பட்டதும், அவ்விஷம் ராமானுஜரையும் அனைத்து சீடர்களையும் கொல்வதற்காகவே செய்யப்பட்டது என்பதும் தெரிந்து விடுகிறது...
இந்த விஷம் வைக்கப்பட்ட நிமிடமே ராமானுஜரின் குருவானவர் தன் சீடனை காப்பாற்றுவதற்காக காவிரிக்கரையினை தாண்டி வருகிறார். இதைக்கேள்விப்பட்ட ராமானுஜர் தன் குருவை நோக்கி தானும் செல்கிறார்...
ராமானுஜரும் அவரின் குருவும் மதிய வெயிலில், சுடும் மணற்பரப்பிலே சந்திக்கிறார்கள்.... ராமானுஜருடன் அவர் சிஷ்யர்கள்... எதிரே குரு..
ராமானுஜர் குருவை கண்டதும், அவரை காப்பாற்ற அவ்வளவு தூரம் குரு ஆற்றைத் தாண்டி வந்ததை நினைந்து உணர்ச்சிப்பூர்வமாக அழுது, குருவின் கால்களிலே விழுகிறார். குரு எதுவும் சொல்லாமல் மௌனமாக இருக்கிறார்... ராமானுஜருக்கு உடல் முழுதும் சுட்டாலும், குருவின் ஆசி வரும் வரை நெடுஞ்சான்கிடையாக குருவின் கால்களிலே கும்பிட்ட படி இருக்கிறார்... குருவோ மௌனம் சாதிக்கிறார்... எழுந்திருக்கச்சொல்லவே இல்லை...
கொதிக்கும் மணலில் நிற்க்கும் ராமானுஜரின் சீடர்கள், ராமானுஜரை சுடும் மணலில் தவிப்பார் என்றெண்ணி, குருவின் மேல் கோபம் வருகிறது....
ஒரு சீடன் பொறுக்கமுடியாது, குருவிடம், எங்கள் குருவை எழுந்திருக்க சொல்லவில்லையே! அவருக்கு சுடுமே! என்று குருவிடம் சொல்கிறார்...
அப்போது அந்த குரு சொல்கிறார்....
உனக்கு உள்ள கோபத்தை என்னால் உணர முடிகின்றது... ஆனால் உன் குருவை காப்பாற்றும் முழு பொறுப்பு உள்ளது என்பதை அறியாது,அவரின் கையில் நஞ்சு வைத்த உணவை கிடைக்கும் படி விட்டு விட்டீர்களே! உங்கள் குரு ராமானுஜரை காப்பாற்றும் முறையா இது? என்று குரு அந்த சீடனிடம் கேட்கிறார்!
அப்போது தான் ராமானுஜருக்கு குரு தன்னை, சுடும் மணலில் இருந்து எழுந்திருக்கச்சொல்லாததன் காரணம் புரிகிறது... குருவின் மேல் தான் கொண்ட அன்பின் அளவிற்க்கு, அந்த ஆழத்தின் அளவிற்க்கு குருவும் தன் சீடனை நேசிக்கிறார் என்று!
ராமானுஜர் தன் குருவின் கால்களில் மறுபடியும் விழுகிறார்... மற்ற அனைத்து சீடர்களும் குருவின் கால்களில் விழுகின்றனர்...
குரு ஆசிர்வதித்து அனைவரையும் எழச்சொல்கிறார்...
(கதை முடிந்தது)
நமது குருவின் வார்த்தைகளை காப்பாற்ற நாமும் அந்த சீடர்களை போன்று துடிக்கிறோம்!!! ஆனால் குருவிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்?
எப்படி நம் குருவானவர் இந்த அளவு தியானத்திலே உயர்ந்தார்? எந்த அளவிற்க்கு அவர் தன் குருவிடம் சரணடைந்திருந்தால், அவர் இந்த அளவு உயர்ந்திருப்பார்?
தியானத்தை 20 நிமிடம் செய்யுங்கள், தற்சோதனை செய்யுங்கள், அகத்தாய்வு செய்யுங்கள் என்றெல்லாம் சொன்னாரே நம் குரு, எப்போதாவது தன்னை மனதாலும் நினைத்துக்கொண்டிருக்காதே என்று சொன்னாரா?
தியானத்திலே சரணாகதி கொள்ள வேண்டாம் என்று சொன்னாரா?
இப்போது நமக்கு அவர் தந்த அனைத்தும் பயனாகி விட்டது... அவர் சொன்ன இறை நிலையின் அறிவியல் தத்துவத்தை, அரைக்கால் சட்டை போட்ட சிறுவர் முதற்க்கொண்டு பேசுகிறார்கள். ஆனால் இவ்வளவும் தந்த குருவானவரைப்பற்றி ஒரு வார்த்தையும் சொல்லாததாக இருக்கிற அந்த அறிவியல் பேச்சுக்களால் என்ன பயன் கிட்டி விடும்?
குருவின் வார்த்தை முக்கியம்... அதை விட குருவிடம் உள்ள பற்று முக்கியம்...
அறிவியல் பற்றி பேசுங்கள். ஆனால் அவை எல்லாம், தன் குருவிடம் தான் கொண்ட சரணாகதியால் கிடைத்தது என்பதை மறந்து விடாதீர்கள்...
குருவிடம் கொள்ளும் சரணாகதியினால், நமக்குள்ளே இந்த அறிவியல் உள்ளுணர்வாய் கிடைக்காதா? மறுப்போர் தரணியில் உண்டோ?
குருவிடம் சரணாகதி கொள்ளும் நேரத்திலே உண்டான அனைத்து உதவிகளையும் அடுத்த தலைமுறைக்குக் காட்டும் பொறுப்பு நமக்கு உண்டு... வெறும் பேப்பருக்குள்ளே அறிவியலாக சொல்லாமல், தியானத்திலே நாம் கண்ட அனுபவத்தை சொல்லி, அனைவரும் குருவிடம் சரணாகதியின் மூலம் அந்த பந்தத்தை உறுதிப்படுத்தி, இறை நெறியை எடுத்துச்செல்லவேண்டும்...
அந்த கடமை நமக்கு உண்டு. குருவின் உயர்வு நம்மிடையே ஆரம்பித்து, எண்ணற்ற தலைமுறையையும் ஈடுபடுத்தி அறிவில் உயர்த்த வேண்டும்...
வாழ்க வளமுடன்...
குருவே சரணம்...
No comments:
Post a Comment