Sunday, December 12, 2010

OM Shanthi Shanthi Changes Reg -- Post 3

என்ன அப்பா தாங்களே கோவிந்தா எனும் சொல்லை பேசும் போது உபயோகித்தால், தங்களது அத்துவைத சாரத்துக்கு அது ஒவ்வாமையாக அல்லவா இருக்கும், என்கின்றார். இதைக் கேட்ட மஹான், ஆமாம்மா சாரி சாரி, என்று இரு கன்னங்களிலும் போட்டுக் கொள்ளுகின்றார் [லிடெரல்ல்ய் கெ டிட் தட் கெச்டுரெ]. கோவிந்தா எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கக் கூடாது தான்மா, என்று தன்முனைப்பின்றி ஒப்புக் கொள்ளுகின்றார். அது தான் மஹான். கோவிந்தா எனும் சொல்லை பயன்படுத்தியிருக்கக் கூடாது என ஒப்புக்கொண்ட மஹான் சிவம், சக்தி எனும் சொற்களுக்கும் இதையே தான் சொல்லுவார் என்கிறது என் உள்ளுணர்வு. வாழ்க வளமுடன்.


அற்புதம் அருண்...

உங்களின் தேடல், முயற்சி, நோக்கம் அனைத்திற்க்கும் வாழ்த்துக்கள்.


1. ஒரு முறை குருவிடம் பேராசிரியர்கள் கூடிப்பேசினார்கள். குருவிடம்,ஒரு பெரிய பட்டியலும், பணமும் தரப்பட்டது...

பேராசிரியர்கள் சொன்னார்கள் : சாமி, இந்த பட்டியலிலே கடந்த ஒரு வருடத்திலே நமது மன்றத்திலே சேர்ந்து தீட்சை எடுத்துக்கோண்டவர்கள், காயகல்ப பயிற்சி எடுத்துக்கொண்டவர்கள் என அனைத்தும் இருக்கிறது ".

தனது வலக்கையின் ஆட்காட்டி விரலால் பின் தலையை சொறிந்து கொண்டே குரு அவர்களிடம் திருப்பிக்கேட்டார்... " இதிலே எத்தனை தேறும்?".

அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லாததால், பேராசிரியர்கள் அமைதி காத்தனர்...


உங்களுடைய எழுத்திலே இருந்து ஒரு கேள்வி....

குருவிடம் அத்வைதத்தினை சொன்னால் மாற்றிக்கொள்வார் என்றீர்கள்... அதனால் தான் அவர் மஹான் என்றீர்கள்...

இப்போது கூட்டம் வேண்டும் ஓடுகிறோமே, அத்வைததிலே கூட்டம் நிலைக்குமா? மாற்றிக்கொள்ளச் சொன்னால் ஏன் முடியவில்லை? நீங்கள் மஹான் போல ஆகவேண்டும் என்று வாழ்த்தினால் வேண்டாம் என்கிறீர்களே... கருணையை புறக்கணிக்கிறிர்களே...

ஒரு வேளை குருவிற்க்கு மட்டும் தான் அத்வைதம்... நமக்கேல்லாம் துவைதமா? அல்லது அதுவும் இல்லையா?


விழிப்பு நிலையிலே சொல்லப்பட்ட எதுவும் மாறாத தன்மை கொண்டிருக்கும் என்பதை குருவே நிலை நிறுத்துவார்... பொறுத்திருந்து பாருங்கள்...

அருண்,உங்கள் விளக்கங்கள் துண்டு துண்டாக அங்காங்கே சிதறி இருக்கிறது...

நீங்கள் ஓம் சாந்தி என்பதை மாற்றிக்கொள்ளலாம் என்கிறீர்கள்... சரி... மாற்றிக்கொள்ளுங்கள்.. ஆனால் ஓம்கார மண்டபத்திற்க்கு விளக்கம் எல்லாம் சொல்கிறீர்களே... அதுவும் ஒரு மதத்திற்கு சார்பாக உள்ளதே..

ஓம் சாந்தி என்ற சொல்லையே ஏற்காதவர்களுக்குத் தான் நீங்கள் விளக்கம் சொல்கிறீர்கள் என்பதை ஒவ்வோர் இடத்திலும் விழிப்பாக இருக்கவேண்டும். புதிதாக சேர்பவர்கள், மதச்சார்பின்மையை கடை பிடிப்பவர்கள்... அவர்களுடைய மதச்சார்பின்மை என்ற இலக்கணத்திலே, ஓம் சாந்தி தவறு... ஓம்கார மண்டபம் சரியானதே என்று இருந்தால் நீங்கள் தப்ப வாய்ப்பு.. இல்லையெனில் கடினமே.. :-)


இல்லை... நமது மணிகண்டன் சொன்னாரே... ஆரம்பத்திலே வரட்டும்...இப்போதைக்கு மாற்றிக்கொள்வோம்.... பிறகு நாம் அவர்களை (மூளைச்சலவை செய்து) மாற்றிவிடுவோம்... என்பது போலவா?

இந்த வெளி உலகத்திலே உள்ளவற்றுக்காக நாம் பேசுகிறோம்.. விடுங்க... நமது குருவின் இருவரிகளுக்குத் தான் என்னுடைய இவ்வளவு முயற்சியும்...அந்த இரு வரிகளைத் தொடாமல் நீங்கள் எங்கெங்கோ செல்கிறீர்கள்... உங்கள் ஞாபகத்திற்க்கு.... அந்த வரிகள்...


தூய் நிலையார் அறிவறிந்து முழுமைபெற்றால்
துரிதமுடன் மதம்கடப்பார் உண்மை காணீர்....


குருவானவர் அறிவறிந்தவரா?

குருவானவர் முழுமை பெற்றவரா?

இரண்டுக்கும் பதில் ஆம் எனில், அவர் மதம் கடந்தவரா? ஆம் எனில், எதற்க்காக நீங்களே குருவைப்பற்றியும்,எதனால் அவர் ஓம் சாந்தி என்பதையும், ஓம்கார மண்டபத்திலே இருந்துவருவதையும் அவர்களிடம் சொல்லக்கூடாது?

எதற்க்காக மதச்சார்பின்மை என்ற வார்த்தை இப்போது வருகிறது? சார்பின்மையை இப்போது தான் பின்பற்றுகிறோம் என்று மாற்றிக்கொள்ளும் போது, குருவின் நிலை? அவர் மதச்சார்பின்மையை கடைபிடிக்காதவர் என்பது போல் ஒரு தோற்றம் தருகிறீர்களே... அதனால் தான் அந்த இரண்டு வரிகளுக்கு விளக்கம் கேட்கிறேன்....

குருவின் வரிகளையாவது தொட்டுப்பேசுங்கள்... தியானத்திலே,குருவை பிறகு தொட முயற்சிப்போம்...

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment