Sunday, December 12, 2010

Will world destroy in 2012??

குருவே சரணம்.


வாழ்க வளமுடன்.


இயற்கையை ஒட்டியே இருக்கும் எந்த நிலையும், நமக்கு இயற்கை சம்பந்தமாக அறிவிலே பிரதிபலிக்கும்.


ஐந்தறிவு விலங்குகளும், பறவைகள் போன்ற ஜீவராசிகளும் கூட பூகம்பம் உள்ளிட்ட இயற்கை விளைவுகளை அறிந்து கொள்ள முடிகின்றது...

இயற்கையை ஒட்டிய ஒன்று தான் இறை நிலை தவமும். தவத்திலே ஆழ்ந்து செல்ல செல்ல, இயற்கையை ஒத்து ஏற்படும் சில மாற்றங்களை நுண்ணிய அளவிலே நின்று புரிந்து கொள்ள முடியும்.

கோரக்க சித்தரின் ஜீவ சமாதி பீடம் இருப்பது வடக்கு பொய்கை நல்லூர் என்ற கிராமம்... இது நாகப்பட்டினத்திற்கும், வேளாங்கண்ணி தலத்திற்கும் நடுவிலே உள்ளது. நாகப்பட்டினம், வேளாங்கண்ணி எல்லாம், சுனாமியினால் கடல் நீர் சூழ்ந்து கோர தாண்டவம் ஆடிய போது, இந்த வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் மட்டும், கடல் நீர் உள் வாங்கியது....

அப்போது, சுற்றி உள்ள கிராம மக்களை எல்லாம் அந்த கோயிலை சுற்றி வைக்கப்பட்டிருந்தார்களாம்...

கடலை ஒட்டிய பல கிராமங்கள் அழிந்த போது, ஜீவசமாதி அருகில் கடல் நீர் கூட போக வில்லை... ஏன்? இயற்கையை ஒட்டிய சித்தருக்கு தெரியாதா இயற்கையை பற்றி? அதற்கேற்றார் போல அமைப்பாக அந்த இடம் அமைந்துள்ளது.

சமீபத்திலே, கோதாவரி நதி வெள்ளத்திலே சூழப்பட்ட ராகவேந்திரர் பிருந்தாவன ஆலயம் பற்றி செய்தியில் படித்த போது, ஆச்சரியமான தகவல் வந்தது... என்னவென்றால், சமாதி ஒட்டிய இடத்திற்கு மட்டும் நீர் உள்ளே செல்லாத வகையிலே வெள்ளத்தின் அளவு இருந்தது தான். 9 அடி நீர் இருந்ததால் சுற்றுச்சுவர் எல்லாம் இடிந்தது... ஆனால், சமாதிக்கு ஒரு சிறு கீரல் கூட ஏற்பட முடியாத வகையிலே தான் வெள்ளத்தின் அளவும், நீர் உள்ளே புகுந்ததன் அளவும் என அனைத்தும் இயற்கை அமைத்தது...

இறை நிலையிலே இருக்கிற போது, இயற்கையின் எந்த விளைவையும் ஏற்கும் மனோ நிலையில் நாம் இருப்போம். அதே போல இயற்கையாக நமக்கு என்ன செய்ய வேண்டுமோ அதுவே நிகழும் என்ற சரணாகதி கூட இருப்பதால், நிகழும் எதையும் எதிர்ப்பின்றி நாம் ஏற்போம். ஆனால், நமது குரு சொல்வது போல,


எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குரு உயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்.

அதாவது, இறை தரிசனம் என்ற தவத்தின் பலனானது, நாம் சராசரியான, இப்போது புரியாத அளவிலே இருப்பது போல இருக்க மாட்டோம். இயற்கையோடு ஒட்டி மன அலையும் விரிந்து இருக்கும்.. அதே போல, இயற்கையை புரிந்து கொள்கிற அளவிலே இருப்போம்.



இந்த கேள்வியின் அடிப்படை என்னவென்று பார்த்தால், இந்த உடலே நான் என்கிற முனைப்பு ஒன்றே தான் இருக்கும்.


உடலைத் தாண்டிய தியானத்தால் மனமானது உயிராக, அதுவே அறிவாக, பேரறிவாக ஒவ்வோர் கட்டத்திலே தன்மாற்றம் பெற்று தன்னிலையை உணர்ந்து அமைதியை, ஆனந்தத்தை பெறும்.

அந்த பேரறிவான இறையிலே தோய்ந்த நிலையிலே, இது போன்ற எந்த வித எண்ணமும் உள் நுழையாது... நமது கேள்வி எப்போதுமே முட்டாள் தனமானது அல்ல என்றாலும், நாம் சிறு வயதில் இருந்து கேட்ட கேள்விகள் அனைத்தும் இப்போதும் கேட்பதில்லை அல்லவா? கேள்விகள் என்பது மனது பக்குவம் பெறுவதை ஒட்டி மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அது போல உயர்ந்த தியான அனுபவத்திலே நமக்கு இந்த மாதிரியான கேள்விகள் உள்ளே நுழையாது...

பேரறிவிலே, தன்னை அன்றி, தன்னைத் தவிர எந்த பொருளும் இல்லை என்று ஆனந்தத்திலே நிறைவிலே ஒடுங்கும் அறிவு. அப்போது, பழக்கத்தால் இருந்த பல விசயங்கள் எல்லாம், தானாகவே அறுந்து விழும்... அப்போது, இறை நிலையிலே, இன்பம், துன்பம், நோய், சிக்கல்., அது இது, ஆண் பெண், உயர்வு தாழ்வு, அச்சம் வீரம், என்ற எதுவும் இல்லாத நிலையிலே நாம் இருப்பதால், இது சம்பந்தமான எதுவும் நமக்குள் இருக்காது போகும். அப்படி நிலைக்காது போகும் எனில், நாம் இப்போது நினைக்கிறோமே, இதெல்லாம் அங்கே இறை நிலைக்குள்/ தனக்குள் கிடையாது என்று உண்மையில் இறையில் தெளிவாகும் போது தான், கேள்வி என்ற அசைவு என்பதை விட மௌனமே சிறந்தது என்று அறிவு ஒடுங்கும்.

அதுவரை, உடல் சார்ந்த கேள்விகள் எழவே செய்யும்.

இந்த உடல் அழியக்கூடியது.. ஆனால் இறை நிலையிலே நம்மை கொண்டு செல்ல ஒரு வாகனம் தான் இந்த உடல்.

முன்பு 2000க்குள் உலகம் அழியும் என்று இருந்தது... சிறு வயதில், உலகம் அழிந்தால் நான் என்னாவேன், இந்த உடல் என்னாகும் என்ற அழுத குழந்தைகளில் நானும் ஒருவன். ஆனால் 2000ம் ஆண்டு பிறந்த போது அந்தக்கணத்திலே, புது வருடக் கொண்டாட்டத்திலே இருந்த போது எனக்கு அந்த ஞாபகம் வந்து சிரிப்பு வந்தது...

இப்போது 2012ம் ஆண்டு ஒரு கணக்கு... இறை நிலைக்கு மட்டும் தான் எப்போதும் நிலைக்கும். மற்ற அனைத்தும் அழிந்து விடும். இயற்கையை விட சக்தி மிக்கது வேறு ஏது? இறை நிலையிலே, பிறப்பு இறப்பு கிடையாது.

போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியனே என்ற மாணிக்கவாசகரின் வரிகள் சத்தியம்.

நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறா
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளத்தில்
ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தால் அன்றி
யார் பெறுவார் யார் தருவார் அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்ப்பொருள் என்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப்பற்றை
செதுக்கிக்கொண்டே இருக்கும் விழிப்பு வேண்டும்...


என்கிற நமது குருவின் வார்த்தையை உள் நுழியுங்கள்..

தான் மெய்ப்பொருள் என்றறியும் பேற்றை...

இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்?


சிலர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு தான் உடல் என்ற பற்றிலே இருந்து மீண்டு செல்ல முயற்சிக்காதவர்கள். அவர்களுக்கு, குரு வும் கூட உடல் என்ற கணக்கை விட்டு அகலாதவர்கள்...

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், குருவை அணுகாதவனும், குருவை விரும்பாதவனும் எதுவும் பெறமாட்டார்.

எத்தனை ஆண்டுகள் ஆனாலும், குருவை அணுகுதல் என்ற ஒன்றை தொடங்காதவர் கேள்விகள் எல்லாம், மழலைகள் போலவே இருப்பர். உடல் மட்டுமே வளர்வது கூட அறியாது செயல்கள் செய்தால், குரு என்ன தான் செய்வார். இயல்பூக்கத்தை காண்பித்தால் கூட திருந்தாதோரை இயற்கை விட்டு வைக்காது.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment