Sunday, December 12, 2010

OM Shanthi Shanthi Changes Reg -- Post 14

வாழ்க வளமுடன்.


வணக்கம் Mr hari

உங்களின் கருத்துக்களை தாங்கள் சத்சங்கத்திலே அளித்து இருந்தீர்கள். தற்போது காணும் மாற்றுக்கருத்துக்களை அதன் தன்மையைப்பற்றி நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வியானது எழுப்பியவரின் கருத்துக்கள் சரியே என்று நமது தலைவரே சொல்லிய பிறகு தான் அதற்கு பதில் எழுத திரு தாமோதரன் ஐயா அவர்களிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள்.

ஆனால் மாற்றத்திற்க்கான காரணங்களை விளக்க ஆரம்பிக்கும் போது, அவர்களுக்குப் பிடிக்கவில்லை, இவர்களுக்கு பிடிக்கவில்லை என்ற காரணத்தினால் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக எழுதி இருந்தார். மாற்றுவது என்ற நிலை வந்தால், முன்பு குருவினால் கொண்டு வரப்பட்ட காரணத்தினை உணர்ந்து, அதற்கு ஏற்றார்போலவே தான் அடுத்த மாற்றமும் இருக்கவேண்டும். குருவே மாற்றினாலும் இதைத் தான் சொல்லுவார் என்று அறிவிற்க்கு நிறைவு தரும் ஒன்றாகவே அது இருக்கவேண்டும்.



இதையே இங்கே வலியுறுத்துகிறோம். மற்றபடி ஒன்றும் இல்லை.

னீங்கள் பதில் சொல்லும் போது, தொலை நோக்குப்பார்வையிலே தான் நமது மன்றம் ஒன்றை மாற்றுகிறது என்று... ஒரு சந்தேகம்... நீங்கள் சொல்வது தான் உண்மை என்றால் குருவான்வர் தொலை நோக்குப்பார்வை இல்லாமல் தான் இதை எல்லாம் எழுதினார் என்கிறீர்களா?



ஏன் காரணம் கேட்டால் கோபம் வருகிறது? எத்தனை கேட்டாலும் உண்மை என்பது சொல்ல சொல்ல நாக்கிலே எச்சில் ஊரும். தாகம் கூட எழாது போகும்.
ஒன்றை மாற்றினால் காரணம் கேட்கவே செய்வார்கள்... ஒழுஙான காரணம் இருந்தால் ஆயிரம் தடவை கூட விளக்கலாம். இல்லை என்றால் பதில் சொல்ல முடியாது சினமே தான் வரும்.

னீங்கள் சொன்னது போல முடிவு எடுக்கும் உரிமை தலமைக்கே தான் இருக்கிறது.. இதிலே என்ன சந்தேகம்? குருவின் தன்மையை ஒட்டி இருக்கும் போது, இப்போது காணும் மற்றத்திற்க்கு காரணம் கேட்டால் சொல்லத்தான் வேண்டும்! எதிராளி வாக்குவாதம் புரிகிறான் என்றெல்லாம் சொல்வது எல்லாம் தப்பிக்கிற வேலை... அது எல்லாம் சரியான பதிலாகாது.

உலக அமைதி எட்டும் வரை உலக சமுதாய சேவா சங்கம் இருக்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறிர்கள்... உங்களுக்கு ஏன் இந்த உள்ளூர பயம்? என்ன சந்தேகம் உங்களுக்கு? நமது சங்கம் இல்லாது போய் விடும் என்று ஏன் உங்களுக்கு தோன்றுகிறது? சொன்னது யார்? அல்லது நீங்களே, உலக அமைதி தோன்ற வருடக்கணக்காகும்... அது வரை நமது மன்றம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டீரா?


ஏன் இந்த எதிர்கால பயம்?


குரு என்ற ஒன்று எப்போதும் நிலைக்கும்... கண்ணை மூடி தியானித்தால் குரு என்ற அருள் கூடவே வருகிறதை உணர்கிறீர்களா? உணரவில்லை என்றால் தவம் இன்னும் நிகழ வில்லை என்றே பொருள்....


கண்ணை மூடி துரியாதீத தவத்திலே எங்காவது ஒரு ஓரத்திலே நமது மன்றமும், தலைவர் அய்யாவும், தாமோதரன் அய்யாவும் நிற்கிறார்களா? அப்படி என்றாலும் இன்னும் தவம் செய்யவில்லை என்று பொருள்...


எது எப்போதும் நிலைக்குமோ அதனை பார்ப்பது மட்டுமே தான் குருவின் சாரமான அத்வைதம்... குருவின் இருப்பு எப்போதுமே இருக்கிறது என்று உணர்வாகும் போது தான் மற்ற அனைத்தையும் விட குருவே உயர்ந்தவர்.. அவரின் ஒவ்வோர் அசைவும் முக்கியம் என்று தெளியும். அதுவரை கண்ணால் பார்க்கிற பொய்களை நம்பி நாடகத்தை ஓட்டவேண்டியது தான்.... நீங்கள் சொன்னீர்கள்... தனி மனிதனை விட சங்கமே உயர்ந்தது என்று... அது பொய். குருவை விட எதுவுமே உயர்ந்தது இல்லை... குரு அன்றி எதுவுமில்லை... குருவைத்தாண்டியும் எவரும் இல்லை என்பதே தான் சத்தியம்...

தாங்கள் உதிர்த்த எந்த ஒரு வார்த்தையும் உடைத்துக்கொண்டே அணு வரை செல்லமுடியும் என்பதை சொல்லவே தான் இக்கடிதம்... பார்ப்பதற்க்கு தான் வாக்குவாதம் போலத் தோன்றும்... அறிவிற்க்குள் உங்கள் எண்ணத்தைப் போட்டால் அந்த அதிர்விலே வரும் பதிலே இந்த எழுத்து என்பதை, குருவோடு இணைந்து நிற்கிற போது புரிந்து கொள்ளலாம்...

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment