Sunday, December 12, 2010

OM Shanthi Shanthi Changes Reg -- Post 2

வாழ்க வளமுடன்


தூய் நிலையார் அறிவறிந்து முழுமைபெற்றால்

துரிதமுடன் மதம் கடப்பார் உண்மை காணீர்...


என்று சொன்னார் நம் குரு...


நமது குரு அறிவறிந்து முழுமை பெறவில்லை என்பதால் தான் மதச்சார்பின்மையை முழுமையாக கடைபிடிக்கவில்லை என்று கூறும் முழுமை அடைந்த அறிவறிந்த மகான்களை வணங்குகிறேன்.

ஏதோ நமது குரு தெரியாமல் ஓம்கார மண்டபத்தை ஓம் கார வடிவிலே கட்டிவிட்டார்... பெயர் மாற்றுவது மட்டும் போதாது... அப்படியே அந்த மண்டபத்தின் தோற்றத்தையும் மாற்றி அமைத்துவிடலாம் என்றும் சிலருக்குத் தோன்றலாம்... ஆமாம், ஓம்கார மண்டபம் தவறான ஒரு தோற்றத்தைத் தருகிறது என்றும் சிலர் சொல்லலாம்... அதற்க்கு விளக்கமும் தரலாம்... என்ன இப்போது கூட்டம் வேண்டும்... பஜனை பாட வேண்டும்... தவம் எல்லாம் செய்து முடித்தாகி விட்டது... கும்பலோடு கோவிந்தா பாடவேண்டிய காலம் கனிந்து விட்டது.

இப்போது நாமெல்லாம் குரு கொடுத்த தவத்தை முழுமையாக கடைபிடித்து, முழுமை அடைந்து குருவைத் தாண்டிய சீடர்களாக நிற்கிறோம்.. அதனால் தான் குருவின் அறிவிற்க்கு எட்டாத பல விசயங்கள் நம்மால் இப்போது செய்ய முடிகிறது...

குரு பௌதீக உடலோடு இருந்த வரை நமது மனவளக்கலை பரவியதை விட இப்போது தான் வேகமாக பரவுகிறது என்று கூறும் மகான்கள் இப்போது நம்மில் பலர் இருக்கிறார்கள்...

கலைஞர் நூற்றாண்டுக்கு வந்தது, அஞ்சல் தலை வெளியீடு என்று பல சாதனைகள்... ஆனால் நமது குருவால் முடியாததை எல்லாம் இப்போது தான் சாதித்து இருக்கிறோம்... இதெல்லாம் நாம் சொல்லி சொல்லி வரும் தலை முறை வரை பரப்பிக்கொண்டே போவோம்...

சரி... குருவானவரை மகரிஷி என்று அழைக்கக்கூடாது. வெறும் வேதத்திரி என்றே அழைக்கவேண்டும்... குருவணக்கம் என்ற இடத்திலே அருட்தந்தைக்கு வணக்கம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. அருட் தந்தை எங்களுக்கென்று தனியாக இருக்கிறார்கள் என்று சிலர் சொல்வார்கள். வேதாத்திரியின் போட்டோவை எடுத்துவிட்டால் இன்னமும் நன்றாக இருக்கும்... இப்படியெல்லாம் ஆசைப்படுவோர்கள் எல்லாம் நமது மனவளக்கலைக்கு வரலாம்.... நாம் இப்படித்தான் பரப்பியாக வேண்டும். ஏனென்றால் நமக்கு இப்போது கூட்டம் வேண்டும்.. இவர்களுக்காக நாம் எதையும் இழக்கத்தயார்...


எவ்வளவோ ஆராய்ச்சி செய்து நமது குரு 98 ஆண்டு வாழ்ந்தாரே... இந்த ஓம் சாந்தி என்பதையும், ஓம் காரமண்டபத்தினையும் மாற்றாமல் பற்றி ஏனோ விட்டு வைத்து விட்டார்..

குரு அறிவறிந்து முழுமை பெற்றால்

துரிதமுடன் மதம் கடப்பார்.. உண்மை காணீர்... என்று நமது குரு ஊருக்குத்தான் உபதேசமாகச்சொன்னாரா? அல்லது தானும் கடைபிடித்தாரா?

அவர் அறிவறிந்து முழுமை அடையவில்லை என்று எடுத்துக்காட்டுங்கள் முதலில்... நிரூபியுங்கள் அவர் முழுமை அடையவில்லை என்று.. இவ்வளவு நாள் நாமெல்லாம் இதைச் செய்தோமே அப்போதெல்லாம் இது சரியாக பட்டது அல்லது அதிலே விழிப்பிலே இல்லாது இருந்துவிட்டு, இப்போது திடீர் ஞானத்தின் காரணம் என்னவோ?

நமது குருவானவர், ஆமப்பா.. நான் விழிப்பில்லாமல் தெரியாமல் அந்த இரண்டு வரியை சொல்லி விட்டேன்... என்று சொன்னாரா? அப்படியே அந்த இரண்டு வரியை மாற்றி இருப்பாரே அதையும் சொல்லுங்கள்...

இந்த பிச்சைக்காரன் கையிலே திருவோடு கூட இல்லாமல் பிச்சை கேட்கிறான்...

முற்போக்கோ அல்லது பிற்போக்கோ, குருவின் வரிகளை இப்போது இருப்பவர்களும் தவம் செய்து முடித்துவிட்டதாய் எண்ணுவோர்கள், குருவின் வரிகள் கூட மாற்றக்கூடியதே என்று நம்மிலே இருந்து கொண்டு கருதுவோர்கள் எல்லாரும் விளக்க வேண்டும்.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment