வாழ்க வளமுடன்! அனைவருக்கும் வணக்கம்!
நண்பர் சுந்தரராஜன் சொல்வது மிகவும் சரியே.
ஏன் இந்த மாற்றம்? இதனால் குரு கற்றுகொடுத்த தவத்தில் என்ன மாற்றம் நிகழும்?
தவமுடிவில் ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி என்பதற்குப் பதிலாக,
என் மனதில் அமைதி நிலவட்டும்
என்னைச் சுற்றிலும் அமைதி நிலவட்டும்
உலகம் முழுவதும் அமைதி நிலவட்டும் - என்று சொல்வதினால் புதிதாக என்ன மாற்றம் உண்டாகும் என்பதை எங்களுக்கு தயவு கூர்ந்து விளக்க முடியுமா?
ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி என்று சொல்வது மதசார்பினை கடைபிடிக்காததாக கருதபட்டால் அருட்பெரும்ஜோதி நகர் மற்றும் ஓம்காரமண்டபம் என்பதை எப்படி இவர்களால் ஏற்று கொள்ள முடியும்?
இதை எங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு குருவின் பாதம் தொட்டு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
வாழ்க வளமுடன்
P. மதிவாணன்
No comments:
Post a Comment