Thursday, December 9, 2010

Guru Grace & Ramanar Link

வாழ்க வளமுடன்


குருவே சரணம்


தெளிந்த அறிவிலே நிறைபேறு பெற குரு என்ற உதவி மட்டுமே எப்போதும் உள்ளது...

மனிதன் முன் பின் எந்த ஒரு குருவினிடம் ஆழ்ந்த மன அலைத்தொடர்பு கொண்டு இருக்கிறாரோ, அவருக்கெல்லாம் குருவின் உதவியானது தொடர்ந்து கிடைப்பது மட்டுமின்றி, ஆழ்ந்த தொடர்பின் அளவிற்க்கு அறிவின் உயர்வும் உணர்த்தப்பட்டு விடுகிறது...

குரு என்ற இருப்பானது உடல் வடிவத்தினை ஆரம்பத்திலே நாம் பார்த்தாலும், காலப்போக்கிலே அணுகும் சீடனின் ஆழ்ந்த தியானத்திலே இறை அனுபவத்தினை உணர்வதற்கு உள்ள உதவியாகிறது...

ரமண மகரிஷி நான் யார்? என்று ஆத்ம விசாரம் மூலம் தியானத்திலே உயர்ந்து, சஹஜ சமாதி நிலையிலேயே ஆழ்ந்து ஒடுங்கி எப்போதும் அந்த அசையாத ஆழ்ந்த மௌனத்திலே இருந்து விலகாது பேரின்ப நிலையிலேயெ இருந்தார்...

அவரிடம் குண்டலினி தியானத்தினைப் பற்றிக்கேட்ட போது, மனம் தான் குண்டலினி என்றார்...

குரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் குண்டலினி தியானத்தினை மூலாதாரத்திலே தொட்டு உணர்த்தி, உயர்த்தி, ஆக்ஞா சக்கத்திரத்திலே உயிரின் இருப்பை ஒரு கணத்திலே தொட்டு உணர்த்தும் வல்லமையான தியானத்தினைத் தந்திருக்கிறார்..

கணபதி முனி என்கிற தவ சீலர் திருவண்ணாமலையிலே ஆழ்ந்த தியானத்திலே ஆழ்ந்து இருந்த போது, கடுமையான வலியிலே தவித்தார்... வெங்கடராமன் என்கிற பெயரை மாற்றி, பகவான் ரமண மகரிஷி என்று மாற்றியவர் தான் இந்த கணபதி முனி அவர்கள்...

அவரை காப்பாற்றுமாறு அவரின் சீடர்கள், ரமணரிடம் முறையிட்ட போது, ரமணர் கணபதி முனி அவர்களை பார்த்து, இந்த வலை சிறிது நேரத்திலே மாறிவிடும் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாராம்... சிறிது நேரத்திலே அவர் அந்த வலி போய்விட்டதாம்...

ரமணரிடம் கேட்டபோது, அவர் சொன்னாராம், ஆழ்ந்த தியானத்திலே லயிக்கும் போது எழும் குண்டலினி எழும் போது சில நேரத்திலே இந்த மாதிரியான உபாதைகள் இருக்கும் என்றும், தனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதாகவும் சொன்னாராம்....

நமது தியான நெறியிலே இருந்து ஆழ்ந்த தவத்திலே லயித்து மணிக்கணக்கிலே ஆழ்ந்து தியானம் செய்பவர்கள் அவரவர் அனுபவத்தினை சொல்வது என்பது மறை பொருள் விளக்கமாகவே ஆகும்...அதற்கு அன்பர்கள் முன் வரவேண்டும் என்று வாழ்த்துக்கிறேன்..

தொடர்ந்து குருவோடு பேசிக்கொண்டே மன அலைத்தொடர்பிலே ஆழ்ந்து இருந்த போது, எமக்கு ஏற்பட்ட தியான அனுபவத்தை எல்லாம் குறிப்பெடுத்துக்கொண்டு எழுத்தாக முடிந்த வரை தந்து கொண்டே இருக்கிறேன்.. அதற்க்கு பதிலாக அன்பர்கள் பலரும் முன் வந்து எம்மிடம் தொடர்பு கொண்டதும், எமக்கு கிடைத்த நட்பாகவே ஆகியும் விட்டது.

இறை நிலை தவத்திலே ஆழ்ந்த நிலையிலே செல்லச் செல்ல எமக்கு ஏற்பட்ட அனுபவம் எல்லாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறேன்...

ஆழ்ந்த இறை தவத்திலே சிவ களத்திலே தொடர்ந்து நீடித்து நிலைத்து நிற்க்க நிற்க்க எண்ணங்கள் குறைந்து வர வர, விடும் மூச்சின் அளவு குறைந்து கொண்டே வரும் என்பதன் படிப்படியான அனுபவத்தை இந்த கட்டுரைத்தொகுப்பின் மூன்றாம் கட்டுரையிலே துரியாதீதம் என்ற தலைப்பிலே எழுதி இருந்தேன்..

http://vethathiri.org/SpiritualDiscussion/index.php?topic=393.0



சமீபத்திலே ரமணரின் வார்த்தைகளினை பார்த்தேன்...

After a brief discussion between Major chadwick and Bhagvan on the necessity of periodic action to ensure that the body remains healthy. There was ten minute silence. Then a devotee asked, " it is stated that one should dive in to oneself with a keen one-pointed mind controlling speech and breath. Is it necessary to control the breath also?"

Bhagavan replied, " if all thoughts are controlled, automatically the breath is also controlled. By intense and sustained practice it will become habitual. controlling the breath through various yogic exercises is like putting brakes to the train when the engine is working. But by watching the source of the mind with full concentration, the thoughts would get controlled. This method would be more effective and easy.It is like shutting the power of the engine and there by stopping the train completely."

ஆக, நமது குருவிடம் கொண்ட ஆழ்ந்த தொடர்பிலே தொடர்ந்து ஆழ்ந்த இறை நிலை தவம் செய்த போது, சிவகளத்திலே நிலைத்து நீடித்து நின்ற போது, ஸ்தூல உடலைக் கடந்தும் விலகியும் இருக்கிற தன்மை கிடைத்தது... அப்போதும் தியானம் தடைபடவில்லை... எப்போது எமது உடலை விலகி நின்று பேரானந்தத்தினை உணர முடிந்ததோ, அப்போதே உடலை விட்டு உயிர் பிரிந்து, தனது சூக்கும உடலிலே புகுந்து கொண்டது... சூக்கும உடலிலே புகுந்த போது தான் மரணம் என்றால் என்ன? என்பதை உணர முடிந்தது...

ஸ்தூல உடலிலே இருந்து சூக்கும உடலிற்கு உயிர் தாவிய போதும் கூட சிவகளத்தினை விட்டு விலகாது விழிப்பிலே தியானம் தொடர்ந்து இருந்தது..

சூக்கும உடலிலே உயிர் இணைந்த உடன், அளவிலா வேகத்திலே இறை அருளானது எம்மை இழுத்துக்கொளவதினை உணரமுடிந்தது... அந்த ஈர்ப்பிலே தொடர்ந்து தியானத்திலே லயித்த போது, சூக்கும உடலில் இருந்து உயிரானது மேலே எழுவதும், அந்த நிலையே தான் குண்டலினி என்றும்... எது முதலில் மனமாக இருந்ததோ, அதுவே தான் உயிராக தன்மாற்றம் அடைந்தது என்று உணர்ந்தேன்... தியானமும் தொடர்ந்தது...சூக்கும உயிரானது அளப்பறிய ஆனந்தத்துடன் அந்த ஈர்ப்பு நிலையாம் இறை என்ற கருணை நிலையால் ஈர்த்துக்கொள்ளப்பட்டது... இறை என்ற கருணை நிலையானதன் ஆற்றலின் முன் இந்த உடல் எனது என்கிற முனைப்பு (" நான்") சென்று கரைந்து ஒன்றாக ஆரம்பித்த போது, எம்மால் தாங்க முடியாத ஆனந்த நிலையும், உடல் என்ற ஒன்றை விலகி நிரந்தரமாக விலகி விடுவோம் என்கிற உணர்வு எண்ணமாக மேலிட்ட போது, அந்த அசையாத சிவகளத்திலே அசைவு ஏற்பட்டது...

இந்த அனுபவத்திலே எமது அம்மை, அப்பனாம் குரு எமக்கு பேரானந்தத்தினை மட்டுமே தந்தார்...குண்டலினியானது உயிராக உணர்ந்து, சூக்குமத்திலே இருந்து உயர்ந்த போதும் எமக்கு ஏற்பட்ட ஆனந்தத்திற்க்கு இப்பிள்ளை என்ன செய்துவிடப்போகிறேன் எம் அன்னைக்கு? வாரி வாரி வழங்கியதற்க்கு என்ன பெரிதாக அவர்க்கு திருப்பித் தரப்போகிறேன்?

குண்டலினி தியானத்திலே எந்த கங்கடமும் இல்லாது நமது குரு நமக்குத் தந்திருக்கிறார் என்பதற்க்குத் தான் இப்பிள்ளை எழுதுகிறான்..

அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்
என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளே
கன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்
உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்..

உன்னிலே நான் அடங்க என்னுள்ளே நீ விளங்க
உனது தன்மை ஒளிர எனதுள்ளத் தூய்மை பெற்றேன்
இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேறு பெற்ற பின்னர்
எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை!


குருவே சரணம்...

வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment