நமது குரு கோவிந்தா என்று சொன்னது ஒருவர் ஏமாற்றும் போது, ஏமாற்றப்பட்டவர்கள் பயன்படுத்தும் சொல்லே... அங்கே சீடனே, குருவிடம் அத்வைதத்தினை சொல்கிற போது, விழிப்பிலே மீண்டும் வருகிறார் குரு... இது ஒன்று...
ஆதி சங்கரர், காசி அழுக்கு மூடையுடன் தன்னை நோக்கி வந்த ஒருவரைப் பார்த்து விலகிப்போ என்கிறார்... அந்த மனிதர் ஆதி சங்கரரிடம், எதை நீங்கள் விலகிப்போகச்சொல்கிறீர்கள்? ஆத்மாவையா? தேகத்தையா? ஆத்மா என்றால் எங்கும் நிறைந்திருப்பதும், எல்லாவற்றிலும் இருக்கிற அது எதிலிருந்து விலகிப்போகச்சொல்கிறீர்கள்?
தேகத்தைத் தான் விலகிப்போகச் சொல்கிறீர்கள் என்றால், தேகம் ஒரு ஜடம் அல்லவா? அதனால் விலகிப்போக முடியுமா?
நீங்கள் ஆத்மாவை அறிவிலிருந்தும் விலகிப்போகச்சொல்கிறீர்களா? என்று திருப்பிக்கேட்க.... ஆதிசங்கரர் அவரின் கால்களிலே விழுந்து குருவாக ஏற்கிறார்...
பழக்க வழக்கங்களிலே( ஆசார அனுஷ்டானங்களிலே) இருந்து மாற்றிக்கொள்ள இறையே ஏற்படுத்தித் தரும் ஒரு வாய்ப்பு தான் இந்த மாதிரியான நிகழ்வுகள்...
நமது குருவுக்கு ஒருவர் சுட்டிக்கட்டியதும், ஆதி சங்கரருக்கு ஒருவர் சுட்டிக்காட்டியதும் ஒரு விதத்திலே ஒரே மாதிரியான நிகழ்வுகளே.
No comments:
Post a Comment