Sunday, December 12, 2010

OM Shanthi Shanthi Changes Reg -- Post 5

அவரவர்க்கு அவரவர் உயர்ந்தோரே என்பதும் அறிவினது திருக்கூத்தில் ஒன்றே...


மணிகண்டன் : உங்களுக்கு குருவின் அந்த 2 வரிகள் மையமாக வைத்து கேட்கப்பட்ட ஒரு வரி கேள்விகளுக்கு,என்ன விடை கண்டீர்கள் / தெரிந்தது என்று தயை கூர்ந்து கூறுங்கள்... வாதிட விரும்புவருக்கு எதுவும் கூற முடியாது என்பதெல்லாம் குருவின் அந்த 2 வரிகளுக்கு விடையாக இருக்க முடியாது என்று தோன்றுகிறது...குருவின் கவிதைக்கும் அதை வைத்து கேட்கப்பட்ட ஒரு வரி கேள்விகளுக்கு மட்டும் விடை தாருங்களேன். வாதிடுவதாக தோன்றினால் மன்னித்து விடுங்கள்... உங்கள் அறிவை எம்மைப்போன்ற மூடர்க்கும் பயனாகும் படி செய்து எம்மை காப்பாற்றுங்கள்...


very simple doubts... (Please refer my previous postings for the questions)

One word answers are fair enough...

காலத்திலே நாம் மாற்றங்கள் சில செய்துகொள்ளும் போது, குருவின் தன்மையை கேள்விக்குறியாக்குதல் தான் இங்கே அலசுகிறோம்... குருவின் தன்மையை விட்டு நிற்கிற மாதிரி செய்கிற எதுவும் நீடித்து நிலைக்காது போகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்... அவ்வளவே...


மற்றபடி, நமக்காக அதிக நேரம் ஒதுக்கி விளக்கும் அருணுக்கு வாழ்த்துக்கள்.

gurucaraïámbuja-nirbhara-bhaktaç
samsárád-acirád-bhava muktaç
sendriya-mánasa-niyamád-evam
drakúyasi nijahødayasthqam devam.(31) bhaja govindham.

Being devoted completely to the lotus-feet of the Master, become released soon from the transmigrate process. Thus, through the discipline of sense and mind-control, you will behold the Deity that resides in your heart.


குருவின் பாதத்திலே லயிப்போம்..

உயிரை எழுப்பி அதை விரித்து அறிவாக எடுத்துக்காட்டும் வல்லமை குருவினைப்பிடித்தால் அன்றி தருவோர் தரணியிலே எவர்?


மறை பொருளாம் மெய்ப்பொருளை அறிய அருட்குருவை மதித்து
தவம் அறம் கற்று பற்றி வாழ வேண்டும்...

அருட்குருவை மதித்து, பற்றி வாழ வேண்டும்... அதுவரை...???

சிறு வயது குழந்தைகளுக்கு உடைகளைத் தைக்கும் பொழுது, அவர்களது வளர்ச்சியை மனதில் கொண்டு உடைகளை சற்று தாராளமாக தைத்துக்கொள்கிறோம். துணியானது அதிக உறுதியுடன் இருக்குமானால் இன்னும் சற்று தாராளமாக பெரிய அளவில் உடைகளை தைத்துக் கொள்கிறோம். இதனால் சில உடைகளை தைக்கும் போது பார்த்தால் பொருத்தமில்லாதது போலத் தோன்றும்.
எனினும், போகப்போக அந்த உடையின் உபயோகம் நீண்ட காலத்திற்க்கு பொருத்தமானதாக இருப்பதைக்காணலாம். இதுபோலவே ஞானிகள் உலக மக்களுக்குத்தரும் அறனெறிப் போதனைகளும், நல்வாழ்விற்கேற்ற திட்டங்களும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த காலத்திற்க்கு சற்றும் பொருத்தமில்லாதது போலவும், அவசியமற்றவை என்று எண்ணும்படியாகவும் தோன்றலாம். கடந்த கால அனுபவங்கள், தற்கால சூழ்னிலைகள், எதிர்கால விளைவுகள் என்ற மூன்றையும் இணைத்து ஊகித்து முக்கால ஞானம் என்ற விரிந்த நோக்கில் ஞானிகளது திட்டங்களும், போதனைகளும் உருவாவதால், மிக குறுகிய நோக்கமுள்ள மயக்கவாதிகளுக்கும், பாமரர்களுக்கும், அவர்களுடைய போதனையில் அடங்கியிருக்கும் நன்மைகள் உடனடியாக எளிதில் புரிந்து கொள்ள முடியாது.


சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே அத்தகைய ஞானிகளின் கருத்துக்கு தெளிவான விளக்கங்களை கொடுக்க இயலும்...
-- வேதாத்திரி மகரிஷி. Source www.vethathirium.org


வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment