மாற்றிக்கொண்டதில்லை!
@ மணிகண்டன் : விடை வேண்டுபவர்க்கு மட்டுமே விடை தரமுடியும் என்று அறிவித்தது நீங்கள்... குருவின் வரிகளுக்கு நான் கேட்டகேள்விகளுக்கு நீங்கள் சீண்டாமல் இருப்பது ஒரு புறம் ( நாங்கள் மறந்து விட்டதாக எடுத்துக்கொள்ளவும்.. மேலும் உங்களிடம் ஞாபக மூட்டுதல் எம்முடைய வேலையும் அல்ல என்பது மறு புறம்)
ஏற்கனவே உள்ளதை தள்ளி வைத்து... அதாவது குரு எதற்காக அப்படி எழுதினார்... அதிலே என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை எல்லாம் தள்ளிவைத்து... இப்போது என்ன சொல்ல வருகிறார்கள் என்று பார்க்கவேண்டும்... என்கிற உங்களின் எண்ணம் மூலம், உங்களை எமக்கு நன்றாக சொல்லி விட்டீர்கள்... எமது அறுகுணத்தைச் சீரமைத்துக்கொள்ளுங்கள் என்கிற உங்கள் அறிவுரைக்கும் நன்றிகள். வழிகாட்டுதலுக்கு நன்றிகள்.
நீங்கள் அறுகுணத்தை சீரமைத்து விட்டவர்..இதனால் தான் இது வரை நீங்கள் குருவின் 2 வரிகளையோ, அல்லது குருவின் தன்மையைச் சார்ந்து எழுந்த கேள்விகளுக்கோ விடை தரவில்லையோ? இது அறுகுணம் கடந்த நிலை என்றாகுமா?
அல்லது குருவைப் பற்றிக்கொண்டு கேட்ட கேள்விகளுக்கு பதிலே இல்லாததால், எதிராளிக்கு அறு குணம் இருப்பதாகச் சொல்லி தப்பிக்கிறீர்களோ என்னவோ...
குருவை நாடி நாடி நாடி, விடை கண்டுபிடித்த நீங்கள் எம்மைப் போன்ற பாமரர்களுக்கும் சொல்லாமல் நாள் கடத்தினால் எப்படி? கருணை காட்டுங்கள் ஐயா! எமக்கு இன்னமும் அறுகுணம் சீராகாததால், நீங்களே விடையை எழுதுங்கள்.... எமது எழுத்துக்களை வைத்தே எமது உயர்வை கணக்கிட்ட உங்களின் ஆற்றலுக்கு வணக்கங்கள்... அப்படியே குருவின் வார்த்தைகளை தள்ளி வைத்து என்பதற்கான காரணத்தையும் போடுங்கள்...
உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு!
என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன் எனக்கு
என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்.. என்றார் நமது குரு..
மாகுரு தன ஜன எவ்வன கர்வம்
ஹரதின மேசா கால: சர்வம்
மாய மயமிதம் அஹிலம் ஹித்வா
பிரம்ம பதம் சம் ப்ரவிசே விதித்வா:
அதாவது இளமை, புகழ், பணம் மற்றும் சுற்றி உள்ளவைகளால் சிறிதும் கர்வப்பட்டு விடாதே! காலமானது ஒரு கணத்திலே இவற்றை மாற்றி வைத்து விட முடியும்... என்கிறார் ஆதி சங்கரர்...
இறை இல்லாத இடமில்லை... குரு உங்களுக்கு துணை நிற்பார்..
வாழ்க வளமுடன்...
அன்புள்ள அருண்
வாழ்க வளமுடன்..
இந்த விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் எல்லாம் ஒவ்வொருவரின் மனோ அலையை பிரதிபலிக்கிறது என்பது உண்மை...
மாற்றங்கள் செய்வதற்க்கு கண்மூடித்தனமான எதிர்ப்பு என்ற நிலையிலே நாம் எப்போதுமே இல்லை என்றாலும், குருவின் வரிகள் எல்லாம் முக்கால ஞானத்தோடு தான் இருக்கும் என்பது எமது சுருக்கமான எண்ணம்.
மாற்றத்திற்கான காரணத்திலே மதச்சார்பின்மையை கடைபிடிக்கவேண்டிய காரணமிருப்பதால் என்று சொல்லிக்கொள்வதற்கு பதிலாக, மாற்றுக்கருத்து உள்ளவர்களுக்கும் கூட நாம் நமது மனவளக்கலையைக்கொண்டு செல்ல, குருவின் வார்த்தைகளை அங்காங்கே அவரவர் அறிவிற்கு பொருந்துகிற மாதிரி சற்றே மாற்றி அமைத்துக்கொண்டு மனவளக்கலையை கொண்டு செல்ல இருக்கிறோம்..
மாற்று வரிகள் இவையே, ஓம் சாந்தி என்று சொல்ல தயக்கம் உள்ளவர்கள் அமைதி அமைதி என்று சொல்லிக்கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தால் அது மிகவும் வித்தியாசப்பட்டிருக்கும்... ஓம் சாந்தி என்று தவம் பயின்றவர்கள் எல்லாம் அப்படியே தொடர்ந்து கடைபிடித்துக்கொள்ளலாம்...
நமது தேவைக்காக, குருவின் நிலையை கேள்விக்குறியாக்குதல் அல்லது யோசிக்க வைத்தல் என்பது தவிர்த்துக்கொள்ளவேண்டியவையே என்பதும் எமது கருத்துக்கள்...அவ்வளவே!
நமக்குள் ஒற்றுமை உண்டு... அந்த இடத்திலே இருந்து கொள்வோம்!
எமது கருத்துக்களினை சொல்ல வேண்டிய இடத்திலே சொல்லிகொள்வது எமது முயற்சி.. இந்த முயற்சி அனைத்து தரப்பிலும் தனியாக நேரடியாக செய்துவருகிறேன். அச்சம் இல்லை.
நீ இங்கே தான் பேசுகிறாய்! அங்கே போய் பேசுவியா? என்று கேள்வி எழுந்தவர்கள் எல்லாம், அணுகிப்பாருங்கள் பொறுப்பானவர்களிடம்... எமது கருத்துக்கள் எட்டியதா என்று கேட்டுப்பார்க்கலாம்..
எந்த காரணமும் இன்றியும் கூட வாழ்த்துவது குருவின் நிலை... ஆனால் சொன்ன சில வரிகளிலே இங்கே நினைவுக்கு வரிகிறது.
உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிர் அறிவை உள்ளுணர்வாய் பெறுதல் வேண்டும்..
அப்படியே தான் எமக்கும் பாடத்தோன்றுகிறது... :-)
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment