வாழ்க வளமுடன்
உலக சமுதாய சேவா சங்கத்தில் 3,500 ஆசிரியர்கள் உள்ளதாகவும் அவர்களை ஒப்புநோக்குகையில் உயர்வு பெறவில்லை என்றும், மனம் போன போக்கில் எழுதியுள்ளீர்கள். அன்பரே நீங்கள் எந்த அளவுகோலை வைத்து இத்தனை பெரையும் எங்கு அளந்தீர்கள், உங்களுடைய அறிவின் அளவுகோலையா, நீங்கள் எந்த உயரத்தில் உள்ளீர்கள், இன்று உலக சமுதாய சேவா சங்கத்தில் 5,000 ஆசிரியர்கள் மகரிஷியின் உயிரிலும், அறிவிலும் கலந்து தன்னலமற்ற சேவை செய்து கொண்டுள்ளார்கள். 14,000க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பட்டம் மற்றும் பட்டய மாணவர்களுக்கு அவர்கள்தான் மனவளக்கலை கல்வியை அளித்து வருகிறார்கள். எதிலும் குறை காண்பது என்று போனால் அதற்கு முடிவே இல்லை. குறை காணும் மனதில். குறைகள் மட்டுமே தென்படும்.
தாங்களின் மேற்கூறிய வரிகளில் சில எழுத்துக்கள் குருவிடம் இருந்து பிரிந்த நிலையிலே இருந்து வந்திருக்கிறது. அதனை தயவு கூர்ந்து விலக்கி விட்டு சத்சங்கத்திலே குருவைச்சார்ந்த அறிவைச்சார்ந்த விவாதங்களை மட்டும் தர முயற்சிப்போம்.
எவரும் பிறர் உயரத்தை அளந்து விட முடியாது. வருகின்ற கேள்விகளின் சாரம் எதனை நோக்கி இழுத்துச்செல்கிறது என்ற நோக்கிலே இருந்து வழுக்காது நின்று பழகுவோம்.
அருள் சார்ந்த ஒன்றை எத்தனை முறை எவர் கேட்பினும் பொறுமையாக சொல்வோம்... குழந்தைக்கு தாயும் தந்தையும் ஆசிரியனும் கற்றுத்தருவது போல...
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே
எவர் வரினும் அஞ்சோம் என்று குருவைச்சார்ந்து நின்று எல்லாரும் கலந்து கொள்ளவேண்டும். குருவை பிடித்துக்கொண்டால் அன்றி முனைப்பை ஒடுக்கமுடியாது என்பது தெளிவாக புரிந்து விடும்...
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment