Sunday, December 12, 2010

OM Shanthi Shanthi Changes Reg -- Post 8

வாழ்க வளமுடன்...


வணக்கம் திரு.சேர்மா அவர்களே...


தூய் நிலையார் அறிவறிந்து முழுமைபெற்றால்
துரிதமுடன் மதம்கடப்பார் உண்மை காணீர்....

என்கிற குருவின் வரிகள் முழுமை பெற்றால் என்ற கவியிலே வருகிறது...

குருவானவர் அறிவறிந்தவரா?



குருவானவர் முழுமை பெற்றவரா?



இரண்டுக்கும் பதில் ஆம் எனில், அவர் மதம் கடந்தவரா?

ஆம் எனில், எதற்க்காக நீங்களே குருவைப்பற்றியும்,எதனால் அவர் ஓம் சாந்தி என்பதையும், ஓம்கார மண்டபத்திலே இருந்துவருவதையும் அவர்களிடம் சொல்லக்கூடாது?

சரி... அவர் ஓம்கார மண்டபத்திலே இப்போது இல்லை என்று உறுதியாக நிரூபிக்க முடியுமா?
துரிதமுடன் மதம் கடப்பார்.. உண்மை காணீர்... என்று நமது குரு ஊருக்குத்தான் உபதேசமாகச்சொன்னாரா? அல்லது தானும் கடைபிடித்தாரா?

அவர் அறிவறிந்து முழுமை அடையவில்லை என்று எடுத்துக்காட்டுங்கள் முதலில்... நிரூபியுங்கள் அவர் முழுமை அடையவில்லை என்று.

எதற்க்காக மதச்சார்பின்மை என்ற வார்த்தை இப்போது வருகிறது? சார்பின்மையை இப்போது முதல் பின்பற்றுகிறோம் என்று மாற்றிக்கொள்ளும் போது, குருவின் நிலையை யோசித்தீர்களா? அவர் மதச்சார்பின்மையை கடைபிடிக்காதவர் என்பது போல் ஒரு தோற்றம் தருகிறீர்களே... அதனால் தான் அந்த இரண்டு வரிகளுக்கு விளக்கம் கேட்கிறேன்....

குருவின் வரிகளையாவது தொட்டுப்பேசுங்கள்...

நீங்கள் ஓம் சாந்தி என்பதை மாற்றிக்கொள்ளலாம் என்கிறீர்கள்... சரி... மாற்றிக்கொள்ளுங்கள். ஓம் சாந்தி என்ற சொல்லையே ஏற்காதவர்களுக்குத் தான் நீங்கள் விளக்கம் சொல்கிறீர்கள் என்பதை ஒவ்வோர் இடத்திலும் விழிப்பாக இருக்கவேண்டும். புதிதாக சேர்பவர்கள், மதச்சார்பின்மையை கடை பிடிப்பவர்கள்... அவர்களுடைய மதச்சார்பின்மை என்ற இலக்கணத்திலே, ஓம் சாந்தி தவறு... ஓம்கார மண்டபம் சரியானதே என்று அவர்கள் நிலை இருந்தால்,ஒரு வேளை தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது.. இல்லையெனில் கடினமே...


நீங்கள் சரியான ஒரு விசயத்தை சொன்னீர்கள்... குருவானவர் தனது எழுத்துக்களை மூல நிலையிலே இருந்து மாற்றாத வகையிலே அமைத்துக்கொள்ளலாம் என்று....

அப்படி எனில், மேலே குறிப்பிட்ட குருவின் 2 வரியை நாம் சரியாகத்தான் கடைபிடிக்கிறோமா? என்பதை விளக்குங்கள்.

அல்லது குருவானவர்...

அல்லது குருவானவர், ஆமப்பா.. ஏதோ தெரியாமல் மதம் கடப்பார் என்று எழுதி விட்டேன். இப்போது நமக்கு இது சரிப்பட்டு வராது என்பதால் இந்த இரண்டு வரியை மாற்றிக்கொள்ளுங்கள் என்று வேறு வரி சொல்லி இருப்பாரே! அதை எம்மைப்போன்று முட்டாள், மூடத்தனமான, மூர்க்கத்தனமான,திருந்தாத சீடர்களுக்கும் எழுதி அருளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

குருவின் தத்துவம் அத்வைதம்... அத்வைதத்திலே கூட்டம் நிலையாக இருக்குமா? துரியாதீத தவத்திலாவது கூட்டம் தெரிகின்றதா?

ஒரு வேளை குருவிற்க்கு மட்டும் தான் அத்வைதமா? குறைந்த பட்சம் குருவின் படத்தின் நாம் அத்வைத சித்தாந்தத்தை கடைபிடிப்பதாக சத்தியம் என்று சொல்லிக்கொள்ள முடியுமா?

உங்களுக்கு எல்லாம் தெரியும். கேள்விக்குறி உள்ள இடத்திலே உங்கள் பதிலை மறக்காமல் தாருங்கள்.

குருவை மிஞ்சிய, குருவிற்க்கு எட்டாத பலவிசயங்கள் நமக்கு இப்போது தெரிந்து விட்டது. குருவே மிகவும் பெருமையோடு நம்மை நோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார்.

வாழ்கவளமுடன்..



This is my last conversation there with Mr.Serma Selvaraj.

Yet, there was posting with Maharishi's Q & A. In that it was clearly indicated that,

உணர்ந்த உண்மை இது தான்... ஓம் என்று பொதுமறையானது. இதில் உடன்படாதவர்கள், ஓம் சாந்திசாந்தி என்பதை விட்டு விடலாம்.


This is where, we all now standing... Guru replied clearly in that. While i was trying to indicate the same.. the whole topic has been barred.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்...ஆதவன் மறைவதில்லை..


vazhga valamudan

No comments:

Post a Comment