Friday, December 10, 2010

பொறி புலன்கள்- அமைதி

வாழ்க வளமுடன்

குருவே சரணம்.


தான் இருப்பது நிஜம் என்றால், தன்னுடைய ஆவலினால் ஏற்பட்ட சிந்தனையிலே மனதை செலுத்தி, செயலை சாதித்து விட்டு அது தான், தனக்குத் தேவைப்படுவது, அதுவே தன் அமைதிக்குத் தேவைப்படுவது என்று துணிந்து செயல்படுகிறான் மனிதன்,..


எப்படி நோக்கினும், தன்னை உணர்தல் என்ற நோக்கை நோக்கியே தான் எந்த செயலும் செய்யப்படுகிறது. கால நீளம், மற்றும் சூழ்னிலை காரணங்களால், தனக்குத் தேவையான அமைதி என்பது இந்த செயல்களால் வரவில்லை என்ற காரணத்தினை மனிதன் புரிந்து கொள்ளாது போவதால், ஆனந்தமான அனுபவம் என்பது எட்டாத ஒன்றாகவே தள்ளி வைத்து விடுகிறான்.

ஒரு செயலால் ஒரு கணத்திலே இன்பம் உணரவேண்டும் என்றால், தன்னுடைய பொறிபுலன்களை அடக்கும் திறமை ஒருவருக்கு அவசியமாகிறது...

எங்கோ மனதை வைத்து விட்டு, அந்த இறுக்கத்திலே செய்யப்படுகின்ற வேதம் ஓதுதலால் எதுவும் கிட்டி விடாது...

ஏனெனில், இறுக்கம் என்பது இன்பத்தை ஒரு போதும் தராது.

அறிவை ஒன்றி அறிவில் நிறுத்தி
அறிவையை அறிய ஆழ்ந்து ஆழ்ந்து
பொறி புலன் அடக்கிப்பொறுமை அடைந்து

என்று நமது குரு நாதர் எழுதினார்.


எண்ணம் தோன்றிய போது, அதுவே தான் நான் என்று ஒரு நிலையிலே மனிதன் அகங்காரம் கொள்கிறான்.

மனதினைக்கொண்டு செய்யப்படுகிற தியானம் என்பது, ஏற்கனவே மனப்பாடம் செய்யப்பட்ட ஒரு விசயத்தினை திருப்பிச் சொல்லிக்கொள்வதைப்போல... பழக்கப்பட்ட ஒரு பாடலை நாம் பாடுவது போல...

மனதினை இறையிலே நிலைத்து வைத்துக்கொண்டு, செய்யப்படும் தியானம் என்பது தன்னுடைய இருப்பு இறையே என்ற தன்மையை மீண்டும் உறுதிப்படுத்துதல் ஆகும். அதுவே தான் சவிகல்ப சமாதி என்ற நிலையை இறுதியாய் நமக்குத்தரும்... சமாதி என்றவுடன் அலறி அடித்துக்கொண்டு உடல் பற்று என்ற காரணத்தினால் முயற்சிக்காமல் இந்த மனப்பாட தியானத்தினை செய்துகொண்டு இருப்போர் பலர் உண்டு...

நானே கடவுள்... நானே பிரம்மம்... என்று தியானத்திலே சொல்வது எல்லாம் எப்படி எனில், நான் மனிதன், மாடு அல்ல என்று நாமே சொல்லிக்கொள்வது போல. தான் மனிதன் என்பதினை திருப்பி திருப்பி சொல்வதனால் தானா நாம் அறிய முடியும்? வெறும் கண்ணை திறந்து பார்த்தால் நாம் மனிதன் என்பதை உணரலாம் அல்லவா?

ஸமாதி என்றால் ஆதிக்கு சமமானது நமது இருப்பு என்று உணர்வால் புரிந்து கொள்வது... இறுக்கமான வேதம் ஓதுதலை விட, தனக்குள்ளே ஆதிக்கு சமமான அறிவே தான் மனமாக தன்மாற்றம் கண்டு விளங்குவதை உணர்வது தான் உயர்வு.

20 நிமிட இறை தியானத்திலே, குருவோ, அவரின் இருப்போ எங்காவது தென்பட்டதா என்று ஆய்வது நமக்கு நல்லதைத் தரும்.

ஸ்தூல உடலின் மீது கொண்டு இருக்கும் பற்றுதலால் தான் மனது என்ற தன்மையிலே இருந்து விடுபடாத தன்மையினை மனிதன் கொண்டிருக்கிறான்.

நிலையில்லாத தன்மையினை கொண்டு இருக்கும் மனது. ஒரு கணம் இன்பம், மறு கணம் துன்பம் . மாறும் தன்மையிலே உள்ள மனது நல்லதல்ல என்று ஏற்றுக்கொள்ளும் நாம், மனதினால் மட்டும் செய்யும் தியானத்தினை செய்வது ஏன்?

குருவின் இருப்பைச் சொல்லாத தியானத்தினால் என்ன பயன்?


இறை வெளியோடு எண்ணத்தினை கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.

நிறை நிலையான இறையே நமது நிலை என்று கொள்வோம்.. தனது இருப்பை உணர்ந்து கொண்டால், எல்லாம் உணர்ந்துகொள்ளலாம். குருவின் இருப்பு புலப்பட்டுவிட்டால், தியானம் கால நீளத்திற்க்குத் தாண்டி தானே நிகழும்.

ஒரு கணத்திலே பொறி புலன்கள் அமைதி பெறும்.

வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment