Sunday, December 12, 2010

OM Shanthi Shanthi Changes Reg -- Post 12

வாழ்க வளமுடன்




பிச்சையெடுத்துண்டு வேதாந்தம் பேசி
பிழைசெய்தே உயிர் வாழும் துறவு வேண்டேன்
அச்சமின்றி உழைத்து ஈட்டி உடலை ஓம்பி
அறம் நின்று அறம் உணர்த்தும் நெறியில் வாழ்வேன்

எச்செயலும் சிந்திக்கா தாற்றுவோர்கள்
என்னை ஏழ்மை நிலையேற்று வாழச்சொன்னால்
உச்ச அறிவின் நிலையில் உலகில் வாழ்வோர்
ஒப்புவரோ பிறர் திணிக்கும் ஈனப்போக்கை.


குரு வேதாத்திரி மகரிஷி... கவிதை எண் 260 (ஞானமும் வாழ்வும்)

குரு என்ற ஒன்றே சத்தியமானது. நிலைத்து நீடித்து நிற்கக்கூடியது. கண்ணைத்திறந்து இருந்தாலும், கண்ணை மூடி தியானித்தாலும், தூக்கத்திலும்,கனவைத்தாண்டியும், சீடனின் மரணத்தை தாண்டியும் கூட நிலைத்திருக்கும் ஒன்றும் கூட குரு என்ற அருள் மட்டுமே தான். எது நிலைக்க வேண்டும் என்று பயம் ஒரு பக்கம், எது நிலைத்து நீடிக்கிறது என்ற பார்வை இல்லாதது மட்டுமின்றி, விழிப்பின்றி அலட்சியம் என்பது ஒரு பக்கம்.

நமக்கு குருவை விட குரு அமைத்துத்தந்த மன்றத்தின் மூலம், எதிர்பார்க்கும் பதவிக்காகவும், அது தரும் கௌரவமும் முக்கியமாகப்படுகிறது. இப்படி கருதுவோர் அருகிலே உள்ள வரை, நமது தலைவர் என்னதான் செய்வார்?

என் ஒளியே சிறந்ததினி ரவிஒளி ஏன் எனக்கு
என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்...

குரு என்ற அறிவின் விழிப்பிலே நிலைத்து நீடித்து மௌனத்திலே இருக்கிற நிலை என்பது, எந்த ஒரு எண்ணத்திற்க்கு மூத்ததும் முந்தியதும் ஆகும்.

எண்ணத்தின் முன் பின் மௌனமே இருக்கும் போது, குருவின் மௌன நிலையிலே இருந்து கொண்டு எண்ணத்தை பார்த்து வினவினால், எண்ணமானது தன் மூல நிலையை நோக்கிச்செல்லும் / நோக்கிச்செல்லவேண்டும். நோக்கிச்செல்ல மறுக்கவோ அல்லது விருப்பமோ இல்லாத போது அங்கே தன்முனைப்பு என்பது தன் உண்மையான வடிவத்தை தரவே செய்யும். மறைக்க முடியாது. ஆனால் சுட்டிக்காட்டினால், எதிராளி வாக்குவாதம் செய்கிறார் என்று சொல்லி ஒதுக்கி விட்டால், நாம் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணுவோர் என்றும் உண்டு.


வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment