Sunday, December 12, 2010

OM Shanthi Shanthi Changes Reg -- Post 13

நண்பரே நிறைய அன்பர்களைப்போலவே யானும் நமது மனவளக்கலை பரவுவது கண்டு மகிழ்கிறேன்.

எமது கரு என்னவென்றால் : நீங்கள் எதை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளுங்கள் ஆனால் அந்த மாற்றம் என்பது நமது குரு எந்த தன்மையிலே சொன்னாரோ, எந்த மனோ அலையிலே நின்று பேசினாரோ அதே மாதிரி இருப்பின், யார் எங்கே எப்போது நம்மை தடுத்துப்பேசினாலும் நம்மால் எத்தனை முறை வேண்டுமானாலும் விளக்கமுடியும். ஆனால் குருவின் தன்மையாம் மௌன நிலையிலே இருந்து விலகி நின்று ஒரு வார்த்தை தயாரித்தால், அது கண்டிப்பாக பிரச்சினை தரக்கூடியதாகவே இருக்கும் என்பதாகும். யான், நமது பொறுப்பாளர்களுக்கு சொல்வதெல்லாம், மனதை குருவின் களத்திலெ இருந்து இறங்கி வந்து பேசவோ எழுதவோ செய்யாதீர்கள். நீங்கள் குரு காட்டிய இருக்கையிலே இருக்கிறீர்கள். குருவைப்போலவே மனதை மௌனத்திலே ஆழ்த்தி ஆழ்த்தி பிறகு பேசுங்கள் என்பது தான். அதுவே நமது குருவிற்க்கு பெருமையைத்தரும்.

தாங்களைப்போன்ற அன்பர்கள் நமது மன்றத்தின் வளர்ச்சிக்காக ஆசைப்படுகிறீர்கள். யான், பொறுப்பாளர்களின் வளர்ந்த நிலைக்காக ஆசைப்படுகிறேன். அவ்வளவே ரத்தின சுருக்கமாக சொல்ல முடிகிறது.



பொறுப்பாளர்கள் வளர வில்லையா என்று கேட்கத் தோன்றினால், நீங்கள் நமது சங்கத்தின் தளத்திற்க்குச் சென்று அங்கே மூத்த பேராசிரியர் எழுதின விளக்கத்தைப்பாருங்கள்... புரிந்து கொள்வீர்கள்.... நமது குரு ஒரு முறை சொன்னார்.... நான் எப்போதும் ஒரே தகவலைத்தான் அப்போதும் இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறேன்... புதிதாக எதுவும் சொல்லவில்லை என்றார். இது உண்மை... குருவானவர் வற்றா இருப்பு என்ற வார்த்தையை 1998ம் ஆண்டு ஆசிரியர் பயிற்சியிலே முதன் முதலாக சொன்னார்....அப்போது அவரிடம், இதற்க்கு முன்பு சுத்தவெளி, இருப்பு நிலை என்று சொன்னீர்களே.. இப்போது புது வார்த்தை என்றால் அதெல்லாம்?


குரு சொன்னார் : இறை வெளி பற்றிய விளக்கத்திலே மெருகூட்டக்கிடைத்த ஒரு சொல்லே தான் வற்றாயிருப்பு என்ற விளக்கம்... முன்பு சொன்ன வார்த்தைகளிலும் எந்த மாறுதலும் இல்லை. மேலும் ஒரு புது விளக்கம் இப்போதைக்கு தரப்பட்டுள்ளது "


இந்த ஒரு புது வார்த்தை சொல்லப்பட்டதை, இப்போது பொறுப்பாளர்கள் சொல்வது என்னவென்றால், மகரிஷியே மாற்றினார்.... அதனால் நாமும் மாற்றுகிறோம...


(காலத்திற்கேற்றபடி) இந்த மாதிரி விளக்கம் தவிருங்கள். இது குருவின் தன்மையிலே இருந்து இருந்து நீங்கள் தரவில்லை என்பதைச்சொல்கிறேன்... அவ்வளவே....


எமது எழுத்துக்கள் எவரின் அறிவு உயர்விற்க்கும் தடையே அல்ல. குருவானவர் வாய் மூடச்சொன்னால் அப்படியே இதை எல்லாம் விட்டு விட்டு அமைதி ஆவேன். வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment